தீ விபத்து: வீட்டில் தனியாக இருந்த பெண் உடல் கருகி பலி!
Read Time:1 Minute, 7 Second
புத்தளம் பகுதி வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில், பொண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், பிரதேச மக்களால் தீ அணைக்கப்பட்டு வீட்டினுள்ளே சென்று பார்த்த போது, குறித்த பெண் உடல் கருகி உயிரிழந்திருந்ததாக தெரியவந்துள்ளது.
புத்தளம் பொலிஸ் பிரிவின் தலுவவெல்ல பகுதியில் தங்கியிருந்த 58 வயதான பெண்ணொருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
இவர் குறித்த வீட்டில் தனியாக தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
புத்தளம் பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating