20 அடி பள்ளத்தில் பஸ் வீழ்ந்து விபத்து
20 அடி பள்ளத்தில் பஸ் வீழ்ந்து விபத்து ஒன்பது பேர் காயம் : ஒருவர் கவலைக்கிடம்
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்தவர்களில் ஒன்பது பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றுக் காலை இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்களின் ஒருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளையிலிருந்து வெல்லவாய நோக்கிச் சென்று சென்று கொண்டிருந்தபோதே கொஸ்லாந்தை எனுமிடத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பஸ் 20 அடி வீழ்ந்தே விபத்துக்குள்ளானது.
சும்பவத்தில் காயமடைந்தவர்களில் எண்மர் கொஸ்லாந்தை வைத்தியசாலையிலும் கவலைக்கிடமான நிலையிலுள்ளவர் தியத்தலாவை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் சம்பவம் தொடர்பில் கொஸ்லாந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating