ரயில் பயணச் சீட்டு விற்பனையில் இரு வருடங்களாக மோசடி!
ரயில் பயணச் சீட்டு விற்பனையில் இரு வருடங்களாக மோசடி! ஹிக்கடுவை ரயில் நிலைய பொறுப்பதிகாரி இடை நிறுத்தம்
ஹிக்கடுவை ரயில் நிலையப் பொறுப்பதிகாரி, பயணச்சீட்டு விற்பனையில் கிடைத்த நிதியை மோசடி செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இரண்டு வருடங்களாக இவர் நிதி மோசடியில் ஈடுபட்டிருந்தமை ஆரம்ப விசாரணகைளின் மூலம் தெரிய வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ரயில்வே திணைக்களத்துக்கு இவரினால் பல இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது மோசடியாக வழங்கப்பட்ட இரண்டாம் வகுப்புக்கான 18 மாதாந்த பயணச்சீட்டுகளும் மீட்கப்பட்டன.
பயணிகளிடமிருந்து உரிய நிதி அறவிடப்பட்டிருந்த போதிலும் இதனை பதிவுசெய்யும் போது குறைவான நிதியை இவர் பதிவு செய்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
Average Rating