கா­தலியை தாக்கி நிர்­வா­ணப்­ப­டுத்தி புகைப்­ப­ட­­மெ­டுத்த வர்த்­தகர்..!!

Read Time:2 Minute, 11 Second

download (10)கா­தலியை தாக்கி நிர்­வா­ணப்­ப­டுத்தி புகைப்­ப­ட­­மெ­டுத்து இணை­யத்­த­ளத்தில் வெளியிடப் போவ­தாக அச்­சுறுத்திய வர்த்­தகர் ஒரு­வரை நீர்­கொ­ழும்பு பிர­தான நீதிவான் ஏ.எம்.என்.பி.தர்­ம­சிங்க எதிர்­வரும் 15ஆம் திகதி வரை விளக்­க­மறி­யலில் வைக்குமாறு உத்­த­ர­விட்டார்.

சந்­தேக நபர் தளுபத்தை பிர­தே­சத்­தைச் சேர்ந்­­த 35 வய­து­டைய திரு­ம­ண­மா­னவராவார். இவர் ஒரு பெண்­­ணுடன் கடந்த ஐந்து வருட கால­மாக இர­க­சிய தொடர்பு வைத்­து வந்­­துள்ளார். வழக்கின் முறைப்­பாட்­டா­ள­ரான குறித்த பெண்ணின் கணவர் வெளிநா­டொன்றில் தொழில் செய்­ப­வ­ராவார். இவர் நீர்­­கொ­ழும்பைச் சேர்ந்த பிர­பல சிங்­கள மொழிப்­பா­ட­கி ஒருவ­ரின் நெருங்­கிய உற­வி­ன­ராவார்.

இந்­­நி­லையில் முறை­ப்­பாட்­டா­ளருக்கு வேறு சில­ருடன் இர­க­சிய தொடர்பு இருப்­ப­தாக சந்­தேக நப­ருக்கு தெரிய வந்­துள்­ளது. இதனை தடுக்க தொலை­பே­சிக்­கட்­டணம் செலுத்­த­வென முறைப்­பாட்­டா­ளரை சந்­தேக நபர் அழைத்து சென்று தனது கடையில் களஞ்­சி­ய­சா­லையில் வைத்து அவ­ரை தாக்­கி­யுள்ளதுடன் நிர்­வா­ணப்­ப­டுத்தி நிழற்­படம் எடுத்­து­ள்ளார். பின்னர் நிர்­வாணப்­ப­டத்தை இணை­யத்தில் வெயிடப் போவ­தாக அச்­சு­றுத்­தி­யுள்ளார்.

இச்­சம்­பவம் கடந்த வாரம் இடம்­பெற்­­றுள்ளது. இது தொட­ர்பாக பாதி­க்­கப்­பட்ட பெண் நீர்­கொ­ழும்பு பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்பாடு செய்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாயின் ஐந்து பவுண் நகையை ஈடு வைத்த மகன் கைது..!!
Next post கடும் நிதி சிக்கல் அரசு நிறுவனங்களை மூடியது அமெரிக்கா..!!!