காதலியை தாக்கி நிர்வாணப்படுத்தி புகைப்படமெடுத்த வர்த்தகர்..!!
காதலியை தாக்கி நிர்வாணப்படுத்தி புகைப்படமெடுத்து இணையத்தளத்தில் வெளியிடப் போவதாக அச்சுறுத்திய வர்த்தகர் ஒருவரை நீர்கொழும்பு பிரதான நீதிவான் ஏ.எம்.என்.பி.தர்மசிங்க எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சந்தேக நபர் தளுபத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய திருமணமானவராவார். இவர் ஒரு பெண்ணுடன் கடந்த ஐந்து வருட காலமாக இரகசிய தொடர்பு வைத்து வந்துள்ளார். வழக்கின் முறைப்பாட்டாளரான குறித்த பெண்ணின் கணவர் வெளிநாடொன்றில் தொழில் செய்பவராவார். இவர் நீர்கொழும்பைச் சேர்ந்த பிரபல சிங்கள மொழிப்பாடகி ஒருவரின் நெருங்கிய உறவினராவார்.
இந்நிலையில் முறைப்பாட்டாளருக்கு வேறு சிலருடன் இரகசிய தொடர்பு இருப்பதாக சந்தேக நபருக்கு தெரிய வந்துள்ளது. இதனை தடுக்க தொலைபேசிக்கட்டணம் செலுத்தவென முறைப்பாட்டாளரை சந்தேக நபர் அழைத்து சென்று தனது கடையில் களஞ்சியசாலையில் வைத்து அவரை தாக்கியுள்ளதுடன் நிர்வாணப்படுத்தி நிழற்படம் எடுத்துள்ளார். பின்னர் நிர்வாணப்படத்தை இணையத்தில் வெயிடப் போவதாக அச்சுறுத்தியுள்ளார்.
இச்சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
Average Rating