டாக்டராக நடித்து பண மோசடி செய்த மாணவி கைது!

Read Time:1 Minute, 42 Second

arrested women 2தேசிய வைத்தியசாலையின் டாக்டராக நடித்து பண மோசடி செய்த மாணவி கைது! பேராசிரியரைக் கைது செய்யவும் பொலிஸார் நடவடிக்கை
கொழும்பு, தேசிய வைத்­தி­ய­சா­லையில் டாக்­ட­ராகப் பணி புரி­வ­தாகத் தன்னைக் கூறிக் கொண்டு அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு ஆட்­களை அனுப்­பு­வ­தற்­கென பல­ரி­டமும் பல இலட்சக் கணக்­கான ரூபா பணத்தைப் பெற்று மோசடி செய்­தமை தொடர்பில் மருத்­துவ மாணவி ஒருவர் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

மருத்­துவக் கல்­லூரி ஒன்றில் கல்வி பயிலும் இந்த மாண­வி­யினால் பல­ரி­ட­மு­மி­ருந்து பெறப்­பட்ட பணம் வைப்­பி­லி­டப்­பட்­டி­ருந்த நிலையில், அந்த வைப்புப் புத்­த­கத்தை வைத்­தி­ருந்தார் என்று கூறப்­படும் பேரா­சி­ரியர் ஒரு­வ­ரையும் கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களைப் பொலிஸார் முன்­னெ­டுத்­துள்­ளனர்.

குறித்த மாணவி மருத்­து­வர்கள் அணியும் ஆடை மற்றும் டெத்­தஸ்கோப் போன்­ற­ன­வற்­றுடன் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லைக்குள் சென்று தன்னை மருத்துவர் போன்று இனங்காட்டி வந்துள்ளமையையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொலன்னறுவைக்கு மாற்றுவதனை ஆட்சேபித்து மட்டு. சிறைக்கைதி கூரையில் ஏறி போராட்டம்!
Next post செல்வம் எம்.பியின் இராஜினாமா தீர்மானம் கைவிடப்பட்டது!!