டாக்டராக நடித்து பண மோசடி செய்த மாணவி கைது!
தேசிய வைத்தியசாலையின் டாக்டராக நடித்து பண மோசடி செய்த மாணவி கைது! பேராசிரியரைக் கைது செய்யவும் பொலிஸார் நடவடிக்கை
கொழும்பு, தேசிய வைத்தியசாலையில் டாக்டராகப் பணி புரிவதாகத் தன்னைக் கூறிக் கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களை அனுப்புவதற்கென பலரிடமும் பல இலட்சக் கணக்கான ரூபா பணத்தைப் பெற்று மோசடி செய்தமை தொடர்பில் மருத்துவ மாணவி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவக் கல்லூரி ஒன்றில் கல்வி பயிலும் இந்த மாணவியினால் பலரிடமுமிருந்து பெறப்பட்ட பணம் வைப்பிலிடப்பட்டிருந்த நிலையில், அந்த வைப்புப் புத்தகத்தை வைத்திருந்தார் என்று கூறப்படும் பேராசிரியர் ஒருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
குறித்த மாணவி மருத்துவர்கள் அணியும் ஆடை மற்றும் டெத்தஸ்கோப் போன்றனவற்றுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் சென்று தன்னை மருத்துவர் போன்று இனங்காட்டி வந்துள்ளமையையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
Average Rating