மூன்றுமாத சிசு சடலமாக மீட்பு
Read Time:1 Minute, 3 Second
நுவரெலியா மாவட்டம் நானுஓயா – உடரதல்ல பகுதி தோட்டத்தில் இருந்து ஆண் சிசுவின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
நானுஓயா பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சிசுவின் சடலம் தோட்ட மயான பூமியில் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிசுவிற்கு வயது மூன்று மாதங்களே என தெரியவந்துள்ளது.
சடலம் தொடர்பான மரண விசாரணையை நுவரெலியா நீதவான் மேற்கொண்டுள்ளார்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சிசுவை மயானத்தில் இட்டுச் சென்ற சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Average Rating