வைத்தியர் மயங்கி விழுந்து மரணம்!
தனியார் ‘கிளினிக்’ ஒன்றில் நோயாளி ஒருவருக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்த வைத்தியர் ஒருவர் மயங்கி விழுந்து வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று பிற்பகல் நுவரெலியா மாவட்டம் அட்டனில் இடம்பெற்றுள்ளது.
அட்டன் பிரதேசத்தில் பிரபல்யமான வைத்தியர் கே. இனியன் ( வயது 38 ) என்பவர் நேற்று பிற்பகல் அட்டன் நகரிலுள்ள தமது தனியார் ‘கிளினிக்’ ஒன்றில் நோயாளி ஒருவரைப் பரிசோதித்துக் கொண்டிருக்கும்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
மயங்கி விழுந்த அவரை, டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும்போது வழியிலேயே அவரது உயிர் பிரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியின் முன்னாள் அதிபரும், ஹைலெவல் சர்வதேச பாடசாலையின் ஸ்தாபகருமான அமரர் எஸ். கிருஷ்ணனின் புதல்வரான காலம் சென்ற வைத்தியர் இனியன் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
Average Rating