பெண்ணால் தாக்கப்பட்டு காயமடைந்த இரு பெண்கள்!!
Read Time:1 Minute, 8 Second
பெண் ஒருவரின் அடி, உதை, கத்திக் குத்து தாக்குதல்களுக்கு இலக்கான இரு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த புத்தளம் – சீரம்பியடி – சின்னநாகவில்லு பகுதியைச் சேர்ந்த இரு பெண்கள் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
பழைய விரோதத்தை மனதில் கொண்டு இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிரோஷா என்ற பெண்ணை தாக்கிய சந்தேகநபராக பெண், தாக்குதலை தடுக்க வந்த ஸ்வீனிதா என்ற பெண்ணையும் தாக்கியுள்ளார்.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் இதுவரை கைது செய்யப்படவில்லை.
புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating