பாலத்திற்குள் ஆட்டோ விழுந்து 18 வயது வாலிபர் மரணம்
Read Time:1 Minute, 12 Second
கேகாலை மாவட்டம் வரகாப்பொல பொலிஸ் பிரிவின் உடுவன வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில 18 வயது வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றையதினம் இரவு முச்சக்கரவண்டியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை மீறி, பாலமொன்றுக்குள் விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் அதில் பயணித்த ஒருவரும், காயமடைந்த நிலையில் வரக்காப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சாரதி உயிரிழந்துள்ளார்.
இவர் ஊருவல – கலபிடமட பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.
விபத்தில் காயமடைந்த மற்றையநபர் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.
Average Rating