ஆற்றில் மூழ்கிய பிக்குவை தேடும் நடவடிக்கை

Read Time:1 Minute, 26 Second

aaru-01தெல்தெனிய ஒருதொட்ட ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதுடன் மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ள இச் சம்பவத்தில் ஒருதொட்ட ஹன்கேவெல விஹாரையைச் சேர்ந்த ஞானானந்த தேரர் (வயது 20) என்ற பிக்குவே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

உளுகங்கை பகுதியிலிருந்து தெல்தெனிய – விக்டோரியா நீர்த்தேக்கம் நோக்கிச் செல்கின்ற இச் சிற்றாற்றில் 4 பிக்குகள் குளித்துக்கொண்டிருந்துள்ளனர்.

இதன்போது திடீரென பெருக்கெடுத்த நீரினால் இந்த 4 பிக்குகளில் ஒருவர் அள்ளுண்டுள்ளார்.

இந்த நிலையில் ஏனைய 3 பிக்குகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

காணாமல் போயுள்ள பிக்குவை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலத்திற்குள் ஆட்டோ விழுந்து 18 வயது வாலிபர் மரணம்
Next post உலகிலேயே செக்சியான பெண்ணாக நடிகை ஸ்கார்லெட் ஜொஹன்சன் தேர்வு!