ஆற்றில் மூழ்கிய பிக்குவை தேடும் நடவடிக்கை
Read Time:1 Minute, 26 Second
தெல்தெனிய ஒருதொட்ட ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதுடன் மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ள இச் சம்பவத்தில் ஒருதொட்ட ஹன்கேவெல விஹாரையைச் சேர்ந்த ஞானானந்த தேரர் (வயது 20) என்ற பிக்குவே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
உளுகங்கை பகுதியிலிருந்து தெல்தெனிய – விக்டோரியா நீர்த்தேக்கம் நோக்கிச் செல்கின்ற இச் சிற்றாற்றில் 4 பிக்குகள் குளித்துக்கொண்டிருந்துள்ளனர்.
இதன்போது திடீரென பெருக்கெடுத்த நீரினால் இந்த 4 பிக்குகளில் ஒருவர் அள்ளுண்டுள்ளார்.
இந்த நிலையில் ஏனைய 3 பிக்குகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போயுள்ள பிக்குவை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating