பல்கலை மாணவிக்கு காதல் தொல்லை, தனியார் பாடசாலை ஆசிரியர் கைது!!

Read Time:2 Minute, 8 Second

arrestபல்­க­லைக்­க­ழக மாண­வி­யொ­ரு­வரை பின் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்த தனியார் வகுப்பு ஆசி­ரி­ய­ரொ­ரு­வரை மிரி­ஹான பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பெலி ஸார் கைது செய்­துள்னர்.

ஹோக்­கந்­தர பிர­தே­சத்தைச் சேர்ந்த ஜே.ஏ. ரவி தினேஷ் என்ற நபரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வ­ராவார்.

ஆசி­ரி­ய­ரான சந்­தேக நபர் சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் முறைப்­பாட்­டா­ள­ரான மாண­வியின் வீட்­டுக்குச் சென்று கல்வி போதித்­தவர் என்றும் மாணவி தற்­போது ஜய­வர்­த­ன­புர பல்­க­லைக்­க­ழ­கத்தில் கல்வி பயில்­கின்றார் எனவும் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

வீட்­டுக்கு கல்வி போதிக்கச் சென்ற காலத்தில் முறைப்­பாட்­டா­ளரின் தொலை­பேசி இல­லக்­கத்தைப் பெற்றுக் கொண்டு அடிக்­கடி தொலை­பே­சியில் தொடர்பு கொண்டு காதல் தொல்லை கொடுப்­ப­தா­கவும் குறுஞ் செய்­தி­களை அனுப்­பு­வ­தா­கவும் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு சென்று வரும் வழியில் பின் தொடர்ந்து பல்­வேறு வகையில் தொல்லை கொடுப்­ப­தா­கவும் மாணவி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

சந்­தேக நப­ரான ஆசி­ரி­யரை மிரி­ஹான பொலிஸார் 22 ஆம் திகதி நுகே­கொடை நீதவான் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­த­போது 1500 ரூபா ரொக்கப் பிணையிலும் ஒரு இலட்ச ரூபா சரீரப் பிணையிலும் செல்ல அனுமதிக்கும்படி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தானில் இந்திய பெண் மானபங்கம்!
Next post மட்டக்களப்பில் மரக்குற்றி விழுந்து, ஒருவர் மரணம்!!