பல்கலை மாணவிக்கு காதல் தொல்லை, தனியார் பாடசாலை ஆசிரியர் கைது!!
பல்கலைக்கழக மாணவியொருவரை பின் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்த தனியார் வகுப்பு ஆசிரியரொருவரை மிரிஹான பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பெலி ஸார் கைது செய்துள்னர்.
ஹோக்கந்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஜே.ஏ. ரவி தினேஷ் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
ஆசிரியரான சந்தேக நபர் சில வருடங்களுக்கு முன்னர் முறைப்பாட்டாளரான மாணவியின் வீட்டுக்குச் சென்று கல்வி போதித்தவர் என்றும் மாணவி தற்போது ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்கின்றார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீட்டுக்கு கல்வி போதிக்கச் சென்ற காலத்தில் முறைப்பாட்டாளரின் தொலைபேசி இலலக்கத்தைப் பெற்றுக் கொண்டு அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு காதல் தொல்லை கொடுப்பதாகவும் குறுஞ் செய்திகளை அனுப்புவதாகவும் பல்கலைக்கழகத்துக்கு சென்று வரும் வழியில் பின் தொடர்ந்து பல்வேறு வகையில் தொல்லை கொடுப்பதாகவும் மாணவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சந்தேக நபரான ஆசிரியரை மிரிஹான பொலிஸார் 22 ஆம் திகதி நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது 1500 ரூபா ரொக்கப் பிணையிலும் ஒரு இலட்ச ரூபா சரீரப் பிணையிலும் செல்ல அனுமதிக்கும்படி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Average Rating