முழு நிர்வாணமாக கலந்து கொண்ட யுவதிகள்..
பல்கலைக்கழக கேளிக்கை நிகழ்வுகளில் முழு நிர்வாணமாக கலந்து கொண்ட யுவதிகள்..
அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்திலுள்ள இரு பல்கலைக்கழகங்களின் ஹெலோவீன் நிகழ்வுகளில் யுவதிகள் இருவர் முழு நிர்வாண கோலத்தில் பங்குபற்றியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பெண்களின் புகைப்படங்கள் டுவிட்டர் சமூக வலைத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன.
இறந்தவர்களை நினைவுகூரும் முகமாக மேற்குலக நாடுகளில் ஒக்டோபர் 31 ஆம் திகதி ஹெலோவீன் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு கேளிக்கை நிகழ்வுகளும் நடைபெறும்.
சடலங்கள், மயானங்கள் போன்ற தொனிப்பொருளில் விநோத ஆடையலங்காரங்களுடன் மக்கள் இந்நிகழ்வுகளில் கலந்துகொள்வது வழக்கம்.
ஆனால், அரிஸோனா மாநிலத்தின் இரு வெ வ்வேறு பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற ஹெலோவீன் நிகழ்வுகளில் யுவதிகள்; இருவர் முழு நிர்வாண கோலத்தில் பங்குபற்றியுள்ளனர். இவர்கள் பாதணி தவிர வேறு எதுவும் அணிந்திருக்கவில்லை.
இந்த யுவதிகள் யாரென அடையாளம் காணப்படவில்லை. மாணவிகள் நிர்வாண கோலத்தில் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டதாக சில அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேவேளை, துகிலுரி நடனமாடுவதை தொழிலாகக் கொண்ட இப்பெண்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பணம் கொடுத்து அழைத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
எவ்வாறயினும், இந்த நடவடிக்கை சர்ச்சைக்கு வழிவகுத்திருக்கிறது.
Average Rating