பாலத்­தி­லி­ருந்து குதித்த அண்­ணனும் தம்­பியும் பலி!

Read Time:3 Minute, 11 Second

candleஅம்பாறை அக்­க­ரைப்­பற்று, பனங்­காடு பாலத்­தி­லி­ருந்து தண்­ணீரில் வீழ்ந்த மோட்டார் சைக்கிள் தலைக்கவ­சத்தை எடுப்­ப­தற்­காக பாலத்தில் இருந்து குதித்த தம்­பியும் அவரை காப்­பாற்ற முயற்­சித்த அண்­ணனும் நீரில் மூழ்கி பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­துள்­ளனர்.

இந்த சம்­பவம் நேற்று முன்தினம் மாலை இடம்­பெற்­றுள்­ள­தாக அக்­க­ரைப்­பற்று பொலிசார் தெரி­வித்­தனர். ஆலை­ய­டி­வேம்பு, நாவற்­காட்டு, கோபால்­கடை வீதியைச் சேர்ந்த 24 வய­து­டையஞான­சே­கரம் ஜனார்த்தன் அவ­ரது சகோ­த­ரான 21 வய­து­டைய தினேஸ் என அழைக்­கப்­படும் ஞான­சே­கரம் ஜெயந்­தி­வாசன் ஆகிய இரு­வ­ருமே உயி­ரி­ழந்­துள்­ளனர்.

இச் சம்­ப­வம்­பற்றி தெரிய வரு­வ­தா­வது,

சாகாம வீதியில் உள்ள பனங்­காடு பாலத்தில் சம்­ப­வ­தி­ன­மான நேற்று முன்தினம் மாலை 6.45 மணி­ய­ளவில் தீபா­வ­ளி­யை­யிட்டு பாலத்தில் காற்­று­வாங்க சென்று நண்­பர்­க­ளுடன் பேசிக் கொண்­டி­ருந்த போது மோட்டார் சைக்­கிளின் தலைக்­க­வசம் பாலத்தில் இருந்து கீழே வீழ்ந்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து தம்­பியார் பாலத்­தின் மேல் இருந்து கீழே குதித்து தலைக்­க­வ­சத்தை எடுக்­க­முற்­பட்­ட­போது நீரினில் மூழ்­கி­யுள்ளார்.

இதனை அவ­தா­னித்த அண்­ண­னான ஜனார்த்தன், தம்­பி­யாரை காப்­பாற்ற பாலத்தில் இருந்து குதித்­துள்ள நிலையில் நீரில் மூழ்­கி­யுள்ள தம்­பி­யாரை மீன­வர்­களின் உத­வி­யுடன் மீட்­டெ­டுத்­துள்ளார்.

எனினும் தம்­பியார் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்லும் வழியில் உயி­ரி­ழந்­துள்ளார்.

இந்­நி­லையில் தம்­பியை காப்­பாற்ற பாலத்தில் இருந்து நீரினில் குதித்த அண்ணன் காணா­மல்­போ­யுள்ள நிலையில் இரவு ஒரு மணி­ய­ளவில் சட­ல­மாக பாலத்­துக்கு அரு­கா­மையில் மீட்­கப்­பட்டார்.

இச் சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்த இரு­வ­ரது சட­லமும் அக்­க­ரைப்­பற்று ஆதார வைத்­தி­ய­சா­லையில் ஒப்­ப­டைக்­கப்­பட்டு பிரேத பரி­சோ­த­னையின் பின்னர் உற­வி­னர்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரனைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகள்­மாரை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த தந்­தை
Next post யாழில் குடும்ப உறுப்பினர்கள் அறுவர் மீது வாள்வெட்டு!