மனைவியை இரும்புக் கம்பியினால் தாக்கிய கணவன், தற்கொலை
திருகோணமலை தோப்பூர் அல்லை நகர்- 05 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 3 பிள்ளையின் தந்தை ஒருவர் அலரி விதை உண்ட நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று காலை இடம் பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிழந்தவர் கமறுதீன் நசீர் என்ற 40 வயதான நபராவார். இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, நேற்று அதிகாலை சம்பவத்தில் மரணமடைந்தவரும் அவரது மனைவியும் சண்டையிட்டுள்ளனர்.இதன்போது இவர் தனது வீட்டிலிருந்த கூரிய இரும்பு ஆயுதத்தினால் தனது மனையியை 15க்கும் மேற்பட்ட தடவை தாக்கியுள்ளார்.
தாக்கப்பட்ட மனைவிக்கு இரத்தம் பீரிட்டு பாய்தோடியுள்ளது. இதனால் தனது மனைவி இறந்து விட்டார் என்று எண்ணி இவர் அந்தக் கணமே தனது பிள்ளைகளிடம் தானும் உயிரை மாய்த்து கொள்ளப் போகிறேன் என்று கூறிவிட்டு தோப்பூர் பம்மான் குள காட்டு பகுதிக்கு சென்று அலரி விதையினையுண்டு மயக்கமுற்றிருந்த நிலையில் வீதியில் கிடந்துள்ளார்.
இவரின் பின்னால் தந்தையை தேடிச் சென்ற மகன் தனது தந்தையின் நிலையினை கண்டு உறவினர்களுக்கு தெரிவித்ததையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
படுகாயத்திற்குள்ளான மனைவி கண்டி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.சம்பவத்தில் மரணமடைந்தவரது ஜனாஸா நேற்று தோப்பூர் மைவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Average Rating