மனைவியை இரும்புக் கம்பியினால் தாக்கிய கணவன், தற்கொலை

Read Time:2 Minute, 20 Second

fight-001திருகோணமலை தோப்பூர் அல்லை நகர்- 05 ஆம் வட்­டா­ரத்தைச் சேர்ந்த 3 பிள்­ளையின் தந்தை ஒருவர் அலரி விதை உண்ட நிலையில் திரு­கோ­ண­மலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு உயி­ழந்­துள்ளார். இந்த சம்­பவம் நேற்று காலை இடம் பெற்­றுள்­ளது.

சம்­ப­வத்தில் உயி­ழந்­தவர் கம­றுதீன் நசீர் என்ற 40 வய­தான நப­ராவார். இந்த சம்­பவம் தொடர்­பாக தெரி­ய­வ­ரு­வ­தா­வது, நேற்று அதி­காலை சம்­ப­வத்தில் மர­ண­ம­டைந்­த­வரும் அவ­ரது மனை­வியும் சண்­டை­யிட்­டுள்­ளனர்.இதன்போது இவர் தனது வீட்­டி­லி­ருந்த கூரிய இரும்பு ஆயு­தத்­தினால் தனது மனை­யியை 15க்கும் மேற்­பட்ட தடவை தாக்­கி­யுள்ளார்.

தாக்­கப்­பட்ட மனை­விக்கு இரத்தம் பீரிட்டு பாய்­தோ­டி­யுள்­ளது. இதனால் தனது மனைவி இறந்து விட்டார் என்று எண்ணி இவர் அந்தக் கணமே தனது பிள்­ளை­க­ளிடம் தானும் உயிரை மாய்த்து கொள்ளப் போகிறேன் என்று கூறி­விட்டு தோப்பூர் பம்மான் குள காட்டு பகு­திக்கு சென்று அலரி விதை­யி­னை­யுண்டு மயக்­க­முற்­றிருந்த நிலையில் வீதியில் கிடந்­துள்ளார்.

இவரின் பின்னால் தந்­தையை தேடிச் சென்ற மகன் தனது தந்தையின் நிலை­யினை கண்டு உற­வி­னர்­க­ளுக்கு தெரி­வித்­த­தை­ய­டுத்து வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

படு­கா­யத்­திற்­குள்­ளான மனைவி கண்டி பொது­வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.சம்பவத்தில் மரணமடைந்தவரது ஜனாஸா நேற்று தோப்பூர் மைவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆட்டோவுக்குள் சிறுமி துஷ்பிரயோகம்: சாரதிக்கு விளக்கமறியல் உத்தரவு
Next post “மண­மகள் தேவை” விளம்­பர மோசடி: கேகாலை நப­ரிடம் சிக்­கிய ஆசி­ரியை!