11 வயதான மாணவி பாலியல் துஷ்பிரயோகம் சந்தேக நபருக்கு விளக்கமறியல்
11 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி விட்டு அதன் பின்னரும் பல சந்தர்ப்பங்களில் பாலியல் ரீதியாக மாணவியை பயன்படுத்திக் கொண்டதாக கூறப்படும் நபரொருவரை இம்மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி மஹவ நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் தமித விஜேசிங்க உத்தரவிட்டார்.
நடனப் பயிற்சி ஆசிரியரான 40 வயது நபரொருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவராவார். இவர் ஒரு பிள்ளையின் தந்தை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாணவியின் பெற்றோர் விவசாயத்துக்கென வீட்டை விட்டுச் சென்ற பின்னர் வீட்டில் தனித்திருந்த மாணவி முதன்முதலில் கடந்த ஜனவரி மாதம் இந்த நபரால் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் கைத்தொலைபேசியூடாக பாலியல் காட்சிகளைக் காண்பித்து பல சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளதென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாணவியின் தாய் இச்சம்பவம் தொடர்பாக பொல்பித்திகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து இந்நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.
Average Rating