கொழும்பில் உயிரிழந்த மட்டு. மாணவனின் சடலம்

Read Time:1 Minute, 6 Second

dead-007கொழும்பின் பிரபல பாடசாலையொன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி உயிரிழந்த மட்டக்களப்பு பாடசாலை மாணவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

களுபோவில வைத்தியசாலையில் நேற்று மாலை இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் பின்னர் குறித்த மாணவனின் சடலம் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

கூடைப்பந்தாட்ட போட்டிக்காக மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு வந்த மாணவனே நேற்று முன்தினம் இரவு நீச்சல் தடாகத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்த மாணவனின் உயிரிழப்பு காரணமாக நடைபெறவிருந்த கூடைப்பந்தாட்ட போட்டி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 4ஆவது மாடியின் ஜன்னல் கம்பிகளில் சிக்கிய குழந்தை மீட்பு
Next post மாலத்தீவின் அதிபராக அப்துல்லா யாமீன் இன்று பதவி ஏற்பு