வாரம் 3 ஆண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட யுவதி

Read Time:4 Minute, 48 Second

3009thumவாரம் 3 ஆண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட யுவதி பிரிட்டனில் அதிக பாலியல் உணர்வு கொண்ட மாணவியாக தெரிவு : மிக ஆபத்தான நடவடிக்கை என சுகாதாரத்துறை நிபுணர்கள் கண்டனம்

பிரிட்டனைச் சேர்ந்த யுவதியொருவர் அந்நாட்டின் மிக அதிகமாக பாலியல் உணர்வுகொண்ட மாணவியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எலினா டேசானி எனும் இந்த யுவதி பிரிட்டனின் எக்ஸ்டர் பல்கலைக்கழக மாணவியாவார். 20 வயதான  எலினா, கணினி விஞ்ஞானத்துறையில் இளமானி பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மூன்றாம் வருட மாணவியாக உள்ளார்.

இந்நிலையில், பிரிட்டனில் அதிக பாலியல் உந்துதல் கொண்ட மாணவ மாணவியை தெரிவுசெய்வதற்காக இணைத்தளமொன்று நடத்திய போட்டியில் எலினா வெற்றி பெற்றுள்ளார்.

இவர் ஒவ்வொரு வாரமும் சாராசரியாக 3 ஆண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு வந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.


தெற்கு லண்டன் பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் முன்னாள் மாணவியான எலினா, எக்ஸெடர் பல்கலைக்கழகத்தில் இணைவதற்குமுன் இரு ஆண்களுடன் மாத்திரமே பாலியல் தொடர்புகளை கொண்டிருந்தாராம்.

ஆனால் அப்பல்கலைக்கழகத்தில் இணைந்தபின் அவர் புதிய சூழலில் கிடைத்த வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க வேண்டுமென விரும்பினார். அதனால், இரு வருடங்களாக காதலித்த தனது காதலரை கைகழுவிவிட்டு பல்கலைக்கழகத்தில் கிடைத்த ஆண்களுடனெல்லாம் பாலியல் உறவில் ஈடுபட ஆரம்பித்தாராம். இவர் லத்வியா நாட்டில் பிறந்தவராவார்.

தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட ஆண்களின் பெயர்களை  எலினா பட்டியலிட்டு வந்துள்ளார். ஆனால், அவர்களில் பல ஆண்கள் எலினாவுக்கு அறிமுகமில்லாதவர்கள். அதனால், அவர்களின் அடையாளங்கள், குறிப்புகள், இல்லாவிட்டால் கேள்விக்குறி ஆகியனவற்றை மாத்திரம் மேற்படி ஆண்களின் பெயர்களுக்குப் பதிலாக தனது பட்டியலில் பொறித்துள்ளார் எலினா டேசானி.

எனினும், இப்பட்டம் காரணமாக எதிர்காலத்தில் தனக்கு தொழிலொன்றைப் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம் எனவும் தனக்கு தொழில் தருவதற்கு பலர் விரும்பாமல் போகலாம் எனவும்  எலினா இப்போது கவலை கொண்டுள்ளார்.

பாதுகாப்பான பாலியல் உறவை வலியுறுத்தும் இணையத்தளமொன்றினால் இப்போட்டி நடத்தப்பட்டது. தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட ஆண்கள் அனைவரும் ஆணுறை அணிந்திருந்தாக எலினா கூறுகிறார்.

ஆனால், இப்போட்டியை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டித்துள்ளனர். இது மிக  ஆபத்தான நடவடிக்கையை எனவும் பாலியல் நோய்கள் பரவுவதற்கு இத்தகைய நடவடிக்கைகள் வழிவகுக்கக்கூடும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இப்போட்டியின் வெற்றியாளர் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே இது தொடர்பாக கருத்துத்தெரிவித்த டாக்டர் பீட்ர் கிறீன்ஹவுஸ், ‘இந்தபோட்டியில் வெற்றி பெறுவதற்கு விரும்புவவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க, அவர்களின் நண்பர்களுக்கு ஆபத்துகள் அதிகரிக்கும்’ எனக் கூறியுள்ளார்.

‘சில பாலியல் நோய்களைக் கொண்டிருப்பவர்களிடம் அந்நோய்களுக்கான அறிகுறிகள் தென்படுவதில்லை. சிலர் அந்நோய்களைக் கொண்டிருப்பதை தெரியாமல் அவர்களிடமிருந்து மற்றவர்கள் அந்நோய்களைப் பெறுகின்றனர்’ எனவும் டாக்டர் பீட்டர் கிறீன்ஹவுஸ் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ். அச்சுவேலிப் பகுதியில் இளம் யுவதியை கடத்த முயன்றவர்கள் மடக்கி பிடிப்பு
Next post பாங்காக்கில் இருந்து இந்தியா வந்த விமான டாய்லெட்டுக்குள் 24 கிலோ தங்க கட்டிகள்!