பாங்காக்கில் இருந்து இந்தியா வந்த விமான டாய்லெட்டுக்குள் 24 கிலோ தங்க கட்டிகள்!
கொல்கத்தா விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானம் ஒன்றின் டாய்லெட்டை கிளீன் செய்ய சென்றபோது, அங்கே 7.22 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளை யாரோ விட்டுச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரு பைகளில் இருந்த இந்த தங்கக்கட்டிகளின் எடை, சுமார் 24 கிலோ!
டாய்லெட்டில் தங்க கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்ட விமானம், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து கொல்கத்தா வந்திருந்தது. அனைத்து பயணிகளும் இறங்கிச் சென்றபின், விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த பைகளை முதலில் கண்ட கிளீனிங் பணியாளர்கள், இவற்றுக்குள் வெடிகுண்டுகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில், உடனே ஏர்போர்ட் அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தனர். அவர்கள், போலீஸ் மற்றும், வெடிகுண்டு பரிசோதனை நிபுணர்கள் சகிதம் வந்து இரு பைகளையும் சோதனையிட்டபோதே, அதற்குள் 24 தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது. ஒவ்வொரு தங்க கட்டியும் 1 கிலோ எடை கொண்டது.
இந்த தங்க கட்டிகளை விமானத்தின் டாய்லெட்டுக்குள் விட்டுச் சென்ற பயணி(கள்) யாரென்று தெரியவில்லை.
Average Rating