பெண்ணைத் தடவி முத்தமிட முயற்சித்த கானஸ்டபிள் கைது

Read Time:1 Minute, 29 Second

kissபொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டுக்கு விசேட பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பெண்ணெருவரைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்தார் என்று கூறப்படும் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை கொள்ளுப்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனியார் சுத்தம் பேணும் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் குறித்த பெண் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து விசாரணையை மேற்கொண்ட பொலிஸார் மேற்படி பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமது மார்பைத் தடவி கட்டிப்பிடித்து முத்தமிட முயற்சித்ததாக மேற்படி பெண் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் கலேவல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாங்காக்கில் இருந்து இந்தியா வந்த விமான டாய்லெட்டுக்குள் 24 கிலோ தங்க கட்டிகள்!
Next post ஐந்தறிவு ஜீவனான நாய்க்குட்டியின் சகோதர பாசம்! (படங்கள் இணைப்பு)