இப்படியும் ஒரு நற்குணம் படைத்த திருடன்
Read Time:1 Minute, 9 Second
திருட்டு, கொள்ளை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் பலர் மூர்க்கத்தனமாக நடந்துகொள்கிறார்கள். சிலரோ மனசாட்சிக்கு பயந்து திருந்தி நடக்கவும் செய்கிறார்கள்.
அதுபோல சீனாவில் ஒரு சம்பவம் நடந்தது. ஷோயூ பின் என்பவர் வாடகை காரில் சென்ற போது தனது செல்போனை தொலைத்து விட்டார். அதை உடன் பயணித்த நபர் நைசாக அபேஸ் செய்து எடுத்துச் சென்று விட்டார்.
சில நாட்களுக்கு பிறகு ஷோயூ பின்னுக்கு ஒரு பார்சல் வந்தது. அதில் அவர் பறிகொடுத்த செல்போனின் சிம் கார்டு மற்றும் 11 பக்கங்களில் டெலிபோன் நெம்பர்கள் இருந்தன.
திருடிய நபருக்கு மனசாட்சி உறுத்தியதால் செல்போனில் பதிவாகி இருந்த நெம்பர்களை எல்லாம் தனது கைப்பட எழுதி அனுப்பி வைத்திருக்கிறார்.
Average Rating