லொறியின் சில்லுக்குள் சிக்கி ஒன்றரை வயது ஆண் குழந்தை மரணம்
Read Time:1 Minute, 9 Second
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் நுகேகொடல்ல – ஹினடியன பிரதேசத்தில் லொறியின் சில்லுக்குள் நசுங்டுண்டு குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றை வீதி நோக்கி செலுத்தியபோது லொறிக்கு பின்னால் நின்ற குழந்தை சில்லுக்குள் நசுங்குண்டுள்ளது.
படுகாயமடைந்த குழந்தை கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளது.
ஒன்றரை வயதான சந்தலு ரசதுன என்ற ஆண் குழந்தையே விபத்தில் உயிரிழந்துள்ளது.
பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.
லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேநகபர் இன்று மினுவங்கொட நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating