பன்றி தாக்கியதில் வயோதிபர் பலி
Read Time:50 Second
மடுல்கலை கலாபொக்க தோட்டத்தைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் பன்றித் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
செல்லையா மாயாண்டி என்ற 76 வயது நிரம்பிய முதியவரே பன்றியின் தாக்குதலுக்கு இலக்காகி பரிதாபமாக உயிரிழந்தவராவார்.
தமது வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்த முதியவர் உடனடியாக மடுல்கலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டார்.
Average Rating