மனைவியை வெட்டி 3 துண்டுகளாக்கிய கணவன்..
Read Time:1 Minute, 9 Second
மகாராஷ்டிர மாநிலம் தானேவில், தனது மனைவியைக் கொன்று 3 துண்டுகளாக வெட்டிய கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பயந்தர் மாவட்டத்தில் கோல்டன் நெஸ்ட் என்ற குடியிருப்பில் வசித்து வந்த கிரிஷ் போடே – மதுவந்தி தம்பதியருக்கு கருத்து வேறுபாடு காரணமாக அவ்வப்போது சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று இரவு, இருவருக்கும் இடையே சண்டை அதிகரித்து, ஆத்திரத்தில கிரிஷ் தனது மனைவியை அடித்துக் கொன்று 3 துண்டுகளாக வெட்டியுள்ளார்.
அதே குடியிருப்பில் வசித்து வந்த அவரது உறவினர், இது குறித்து அறிந்ததும் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றினர். கிரிஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
Average Rating