விபசார விடுதியில் கர்ப்பம் தரித்த எய்ட்ஸ் நோயாளி

Read Time:2 Minute, 30 Second

prosit.-04டெல்லி விபச்சார தடுப்பு போலீசார் கடந்த மாதம் புதுடெல்லியில் உள்ள பல்வேறு விபசார விடுதிகளில் திடீர் ‘ரெய்டு’ நடத்தினர்.

அங்கு தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பல இளம்பெண்களை கைது செய்து டெல்லியில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.

இவர்களில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்தார். அவருக்கு எச்.ஐ.வி. (எய்ட்ஸ்) தொற்று இருப்பதாக தெரிவித்த அந்த இளம்பெண் எதிர்பாராத விதமாக உருவாகி, வயிற்றுக்குள் வளர்ந்து வரும் கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும் என காப்பக நிர்வாகிகளுக்கு அந்த பெண் கோரிக்கை விடுத்தார்.

அரசு அதிகாரிகள் இதற்கு அனுமதி வழங்காததால் தனது நோயை காரணம் காட்டி கருக்கலைப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என அவர் டெல்லி ஐகோர்ட்டில் முறையீடு செய்தார்.

அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்விக்க டெல்லி அரசுக்கு ஏதேனும் ஆட்சேபனை உள்ளதா? என மாநில அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியது.

மாநில அரசும் தடை ஏதுமில்லை என பதில் அளித்தது.

இதனையடுத்து, இந்த வழக்கை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதி மனுதாரரை பரிசோதித்து இன்னும் 3 நாட்களுக்குள் கருக்கலைப்பு செய்வது தொடர்பாக முடிவெடுக்கும்படி டெல்லி தீண்தயாள் உபாத்யாயா அரசு ஆஸ்பத்திரி சூப்பிரண்ட்ருக்கு உத்தரவிட்டார்.

கருவின் வளர்ச்சி நிலை 19 வாரத்தை கடந்து விட்டதால் சிகிச்சையின் போது அந்த பெண்ணுக்கு உரிய மருந்து, மாத்திரைகளும் சத்தான உணவும் வழங்க ஏற்பாடு செய்யும்படியும் மாநில அரசுக்கு டெல்லி ஐகோர்ட் நீதிபதி சுனிதா குப்தா அறிவுறுத்தினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
Next post இலங்கையில் இவ்வாண்டில் 500 பேர் சுட்டுக்கொலை