இரண்டு சகோதரிகளை கொலை செய்ய, 7 லட்சம் வழங்கிய சகோதரன்..!
இரண்டு சகோதரிகள் மற்றும் மைத்துனரை கொலை செய்வதற்காக ஏழு லட்சம் ரூபா வழங்கிய நபர் ஒருவரை களுத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இக் கொலைகளை செய்யாமல் இருப்பதற்காக சகோதரிகளிடமும், கொலையொப்பந்தக்காரர் மூன்று லட்சம் ரூபா பணம் பெற்றுக் கொண்டுள்ளார்.
கொலை செய்வதற்காக ஏழு லட்ச ரூபாவும், செய்யாமல் இருப்பதற்காக மூன்று லட்ச ரூபாவும் பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு பணம் பெற்றுக் கொண்ட நபரையும், கொலை செய்வதற்காக பணம் வழங்கிய நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சியம்பலாண்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இந்த கொலை ஒப்பந்தத்தை வழங்கியுள்ளார்.
பணம் பெற்றுக்கொண்ட கப்பக் கும்பலின் உறுப்பினர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொலை செய்யுமாறு உத்தரவிட்ட நபரின் சகோதரி பிரான்ஸில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சகோதரி, ஐந்து வயது முதல் சகோதரனை பராமரித்து, சொகுசான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தவர் என குறிப்பிடப்படுகிறது. குறித்த சகோதரி ஹோட்டல் ஒன்றை பராமரிக்கும் பணியை சகோதரனுக்கு வழங்கியுள்ளார்.
இந்த ஹோட்டலில் நிதி மோசடி இடம்பெற்றமை கண்டறியப்பட்டதனைத் தொடர்ந்து ஹோட்டலின் பொறுப்பை மற்றுமொரு சகோதரிக்கும் அவரது கணவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமுற்ற சகோதரன் இரண்டு சகோதரிகளையும் ஒரு சகோதரியின் கணவரையும் கொலை செய்ய, கும்பல் ஒன்றுக்கு ஏழு லட்ச ரூபா கப்பம் வழங்கியுள்ளார்.
சம்பவத்தடன் தொடர்புடைய கும்பலைச் சேர்ந்த மேலும் இருவரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Average Rating