கணவனைக் கொன்று மலசலக் குளியில் வீசிய மனைவி உட்பட இருவருக்கு மரண தண்டனை
Read Time:1 Minute, 12 Second
கணவனைத் தாக்கி கத்தியால் குத்திக் கொன்று அவரது உடலை மலசலக் குளியில் வீசிய மனைவிக்கும் அதனுடன் தொடர்புடைய ஆணொருவருக்கும் கேகாலை மேல்நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர குறித்த இரு குற்றவாளிகளுக்கும்; மரணதண்டனை விதித்துள்ளார்.
இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சேவகட்ட ருவன்வெல்ல பொலிஸ் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி அல்லது அதற்கண்மித்த தினத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் 41 வயதான நபரொருவரே கொலை செய்யப்பட்டவாராவார்
ருவன்வெல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு விசாரணையின் பின்னர் நீதிபதியின் பணிப்பின் பேரில் மேல் நீதிமன்றத்துக்கு ஆற்றப்படுத்தப்பட்டது.
Average Rating