பிரிவினைக்கோ, தனிஈழத்துக்கோ இடமில்லை; பொதுபல சேனா எச்சரிக்கை
Read Time:1 Minute, 7 Second
சர்வதேசத்தின் பேச்சைக் கேட்டு இலங்கையில் பிரிவினையையோ அல்லது தனித் தமிழீழத்தினையோ உருவாக்க கோருவோர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பொது பல சேனா எச்சரித்துள்ளது.
அதன்படி இலங்கையில் தனித் தமிழீழத்திற்கோ முஸ்லிம் தீவிரவாதத்திற்கோ இடமில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச பிரிவினைவாதிகளின் பேச்சைக் கேட்டு இலங்கையில் பிரிவினை வாதத்தினை உருவாக்கவோ அல்லது தனித் தமிழீழத்தினை உருவாக்கவோ முடியாது.
அவ்வாறானதொரு எண்ணம் எவருக்காவது இருக்குமாயின் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Average Rating