இஸ்லாமிய மதத்தலம் மீது தாக்குதல்
Read Time:1 Minute, 21 Second
கொழும்பு தெஹிவளையில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் தாருஸ் ஸாபி மீது நள்ளிரவு நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அங்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.
இதன்பின்னர் தாக்குதல் சம்பவத்தை நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தப்பள்ளிவாசலை மூடுமாறு சிலர் அச்சுறுத்தி வந்ததாக முறையிடப்பட்டிருந்தது.
இந்தநிலையிலேயே நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பில் எமது செய்தி சேவை காவல்துறை பேச்சாளரிடம் தொடர்புகொண்ட கேட்டபோது இந்த மதத்தலம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து விசாரணைகள் இடம்பெறுவதாகவும் காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating