வைத்தியருக்கு விளக்கமறியல்..
Read Time:1 Minute, 5 Second
மதுபோதையில் தலைகவசமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்திய குற்றச்சாட்டில் வைத்தியர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த வைத்தியரை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்திய போதே அவரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் அருண அளுத்கே உத்தரவிட்டார்.
அதுமட்டுமன்றி உப-பொலிஸ் பரிசோதகரை தாக்கியமை மற்றும் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகளும் அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் தாக்குதலுக்கு இலக்கான உப-பொலிஸ் பரிசோதகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Average Rating