மின் தாக்கி ஒருவர் மரணம்
Read Time:58 Second
சிலாபம், காக்கைபள்ளி பிரதேசத்திலுள்ள இறால் பண்ணையில் கடமையாற்றிவருகின்ற ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார்.
சிலாபம், பம்பல பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான ரோஹித திசேரா என்பவரே மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார்.
இறால் பண்ணையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இவர் கடமையாற்றிக்கொண்டிருந்தபோது, மின் தாக்குதலுக்கு உள்ளானார். இந்த நிலையில், இவரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் சிலாபம் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
Average Rating