பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் செல்லும் வழியில் வெடிகுண்டு
Read Time:1 Minute, 21 Second
பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷரப் மீது பெனாசிர் கொலை வழக்கு, தேசதுரோக வழக்கு உள்பட 5 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
4 வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைத்து விட்டது. புதிதாக தொடரப்பட்ட தேசதுரோக வழக்கில் முஷரப் இன்று சிறப்பு கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கில் ஆஜராக முஷரபை ழைத்து செல்லும் வழியில் தேசிய சுகாதார நிறுவனம் அருகில் 5 கிலோ வெடிமருந்துகளுடன் 2 துப்பாக்கிகளும் ஒரு பையயில் இருந்தது.
உடனடியாக அந்த பகுதிக்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வெடி குண்டை செயலிழக்க செய்தனர். இதனால் முஷாரப் காலை 11 மணிக்கு தாமதமாக கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.
இந்த வழக்கை விசாரிக்கும் பைசல் அராப் தலைமையிலான 3 நபர் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை வருகிற ஜனவரி 1-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Average Rating