பெண்ணின் மூக்கு மற்றும் மேலுதட்டை சாப்பிட்ட எலி
குழந்தையாக இருந்த போது எலிகளால் மூக்கும் மேல் உதடும் கடித்து குதறப்பட்ட யுவதியொருவருக்கு இலவச பிளாஸ்ரிக் அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு அவரது கோரமடைந்த முகத்தை சீர்படுத்த சீன மருத்துவமனையொன்று முன்வந்துள்ளது.
ஷாங்டொங் மாகாணத்தைச் சேர்ந்த ஸு சன்னி என்ற 23 வயது யுவதிக்கே இவ்வாறு இலவச அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.
சன்னி குழந்தையாக இருந்த போது, அவரது தாயார் உணவை பெறும் முகமாக வீட்டைவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவரது தந்தையும் வீட்டை விட்டு சென்றுவிட, பாலகியான அவர் 3 நாட்கள் வீட்டில் தனியாக இருந்துள்ளார்
இந்நிலையில், அவரது மூக்கையும் மேலுதட்டையும் அங்கு நடமாடிய எலிகள் இரவோடிரவாக கடித்துக் குதறியுள்ளன.
மூன்று நாட்கள் கழித்து வீடு திரும்பிய தாயார், தனது மகளுக்கு நேர்ந்த கதியைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
எனினும், பணவசதியற்ற அவர், தனது மகளுக்கு மருத்துவ சிகிச்சை பெற முயற்சிக்கவில்லை.
இந்நிலையில், தற்போது சீனாவிலுள்ள கிங்டவோ பொஷி என்ற மருத்துவமனை சன்னிக்கு இலவச அறுவைச்சிகிச்சையை வழங்க முன்வந்துள்ளது.
Average Rating