’13ம் பக்கம் பார்க்க’ படத்திற்காக சுருட்டு பிடித்த நளினி
’13ம் பக்கம் பார்க்க’ படத்திற்காக நளினி சுருட்டு பிடிக்கும் சுடலை ஆட்சி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பல படங்களில் கதை, வசனம், எழுதி இணை இயக்குனராக பணியாற்றியவர் புகழ்மணி. தற்போது இவர் ’13ம் பக்கம் பார்க்க’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தை ஆர்.கே.வி.ஃபிலிம் மீடியா சார்பில் வினோத்குமார் தயாரிக்கிறார்.
இதில் நடிகை நளினி சுருட்டுப் பிடிக்கும் சுடலை ஆட்சி என்ற கதாபாத்திரத்தில் பயங்கரமான மந்திரக்காரியாக நடிக்கிறார்.
பயங்கர ஆவிகளை ஏவிவிடுவது, பேயோட்டுவது, பில்லி சூனியம் செய்வது என்று பயங்கர மந்திரவாதி கதாபாத்திரத்தில் நளினி நடித்த காட்சிகள் 40 அடி உயர முனீஸ்வரர் சிலை உள்ள கோவிலில் சமீபத்தில் படம்பிடிக்கப்பட்டது.
அப்போது சில பெண்கள் நளினி உச்சரித்த மந்திரத்தை கேட்டு, சாமி வந்து ஆடத் தொடங்கினார்களாம்! படத்தில் நளினி சுருட்டு பிடித்தபடி நடிக்கும் காட்சி பலரது பாரட்டை பெறும் என்கிறார் படத்தின் இயக்குனர் புகழ்மணி. இப்படம் அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது.
Average Rating