கட்டாயப்படுத்தி முத்தம் கொடுத்தவரின் நாக்கை கடித்து குதறிய இளம் பெண்

Read Time:2 Minute, 21 Second

kissமத்திய பிரதேச மாநிலம் போபாலில் கட்டாயப்படுத்தி முத்தம் கொடுத்த வாலிபரின் நாக்கை இளம்பெண் கடித்து குதறியுள்ளார். இது குறித்து இருவரும் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கம்லா நகரில் அழகு நிலையத்தில் 18 வயதுடைய இளம்பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார். காலையில் வேலைக்கு சென்ற அந்த பெண்ணை 30 வயதுடைய வாலிபர் ஒருவர் வழிமறித்து கட்டாயப்படுத்தி முத்தமிட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், வாலிபரின் நாக்கை நன்றாக கடித்து காயப்படுத்தினார். இதனால் வலியால் துடித்த அந்த வாலிபர் அ கம்லாநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனைதொடர்ந்து அந்த பெண்ணும் புகார் அளித்தார்.

அப்போது போலீஸாரிடம் பேசிய அந்த பெண் தான் அழகு நிலையத்தில் வேலை செய்துவருவதாகவும்.அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் குடும்பத்தை காப்பாற்றி வருவதாகவும் தன்னை கடந்த சில நாட்களாகவே அந்த வாலிபர் கேலி செய்ததாகவும், இது குறித்து தனது தந்தையிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.

ஆனால், முத்தம் கொடுத்த வாலிபரோ, தானும், அந்த பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளாக பழகி வந்ததாகவும், இன்று காலையில் சந்திக்கலாம் என்று கூறினார் என்றும், ரதிபேட்டில் இருந்து போபால் வந்த தான் காலையில் அந்த பெண்ணை பார்த்ததாகவும் கூறியுள்ளார்.

ஆனால் காவல்துறையினர், அந்த வாலிபரின் விளக்கத்தை ஏற்க மறுத்ததோடு வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாதிரிமார்கள் சிறார்களை பாலியல் துன்புறுத்தல்: வத்திக்கனுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம்
Next post லண்டனில் முத்தமிட்டதால், மாட்டிக் கொண்ட நகைத்திருடன்