சடலமாக மீட்கப்பட்டவர் பேராதனை பல்கலை மாணவனே!
Read Time:1 Minute, 2 Second
பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தின் காட்டுப்பகுதியில் மரமொன்றில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சடலம் பேராதனை பல்கலைக்கழகத்தில் கலை பிரிவில் கல்வி கற்கும் அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 23 வயதான வி.கே.நிஷாந்த என்பவருடையது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
சடலம் மீதான நீதவான் மரண விசாரணையின் பின்னர் மாணவனது பெயர் விபரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சடலம் மீதான பிரேத பரிசோதனை இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இந்த மாணவன் கடந்த 2011ஆம் ஆண்டில் இடம்பெற்ற பகிடிவதை சம்பவமொன்றின் பிரதான சாட்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating