தனக்குத்தானே தீ வைத்த நபரை கட்டிப் பிடித்த பெண், இருவரும் பலத்த எரிகாங்களுடன் வைத்தியசாலையில்!
வெயாங்கொட நகரிலுள்ள ஒரு ஆணும் பெண்ணும் தீ வைத்துக் கொண்டு பலத்த காயங்களுடன் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வெயாங்கொட பிரதேசத்தில் கராஜ் ஒன்றின் உரிமையாளரும் வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளருமே இவ்வாறு தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரும் விவாகரத்து பெற்றவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
பெண்ணின் வர்த்தக நிலையத்துக்கு சென்ற இந்த நபர், பெண்ணுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அந்தப் பெண் தான் தீவைத்துக் கொள்ளப் போவதாகத் தெரிவித்து உடம்பில் மண்ணெண்ணை ஊற்றிக் கொண்ட போது மண்ணெண்ணை போத்தலை பறித்து தலையில் ஊற்றிக் கொண்ட ஆண் நபர் தீயிட்டுக் கொண்டுள்ளார்.
உடம்பில் மண்ணெண்ணை ஊற்றிக் கொண்ட பெண் அவரைக் கட்டிப்பிடிக்கவும் இருவரும் சேர்ந்து தீப்பிடித்து எரிந்துள்ளனர். அயலவர்கள் வந்து இருவரையும் வைத்தியசாலையில் சேர்த்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
Average Rating