அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் இருந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் தப்பியோட்டம்
மனூஸ் தீவில் உள்ள சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைக்கும் முகாமில் இருந்து சுமார் 35 பேர் தப்பிச்சென்றுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 35 புகலிடக்கோரிக்கையாளர்கள் பாதுகாப்பு வேலியை வெட்டி தப்பிச் சென்றபோதிலும் உடனடியாக அவர்களை மீண்டும் கைது செய்து தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைத்தாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்
இவர்களில் சிலர் காயமடைந்துள்ளதால் அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.
அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முற்படும் சட்டவிரோத குடியேற்றவாசிகளை தடுத்து வைக்கும் நோக்கில் மனூஸ் தீவில் அமைக்கப்பட்ட தடுப்புமுகாமிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த முகாமினதும் நவ்று தீவில் உள்ள முகாமினதும் நிலமை குறித்து ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட மனித உரிமை நிறுவனங்கள் விமர்சனங்களை தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை புகலிடக் கோரிக்கையாளர்கள் முகாம் பணியாளர்கள் சிலர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating