யாழ். சங்குவேலியில் வாள் வெட்டு; இருவர் காயம்
யாழ். சங்குவேலி தெற்கு பகுதியில் அடையாளங் காணப்படாதவர்களின் வாள்வெட்டு தாக்குதலில் இரண்டு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த இரண்டு இளைஞர்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வாள்வெட்டு தாக்குதல் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரையில் கைதுசெய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.