ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட நால்வருக்கு 20 கசையடிகள்
Read Time:56 Second
வட நைஜீரியாவிலுள்ள போசி நகரில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான நால்வருக்கு தலா 20 கசையடிகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பிராந்திய மத நீதிமன்றமொன்றின் உத்தரவின் பேரிலேயே மேற்படி தண்டனை வழங்கப்பட்டது.
ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த வருட இறுதியில் கைது செய்யப்பட்டவர்கள் குழுவில் அந்த நால்வரும் உள்ளடங்குகின்றனர்.
அவர்கள் கசையடிகள் தண்டனை வழங்கப்படுவதற்கு முன்னர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு அடித்து உதைக்கப்பட்டதாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
Average Rating