மீண்டும் கத்தி வெட்டு; சீனாவில் 3 பேர் பலி
Read Time:1 Minute, 17 Second
சீனாவில் இடம்பெற்ற கத்தி வெட்டுத் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
சீனா – ஹுனான் மாகாணத்தில் உள்ள சங்;ஷா பகுதியில் ஆயுததாரிகள் சிலர் பொது மக்கள் மீது இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
தாக்குதலை நடத்திய ஒருவரை காவற்துறையினர் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர்.
ஏற்கனவே சீனாவின் யுனான் மாகாணத்தில் கடந்த முதலாம் திகதி இவ்வாறான ஆயுததாரிகளால் தொடரூந்து நிலையம் ஒன்றில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதல்களுக்கான காரணம் என்னவென்று இதுவரையில் தெரியவில்லை.
எனினும் சீனாவில் சிறுபான்மையினராக வாழ்கின்ற முஸ்லிம்களின் போராட்ட குழுவே இந்த தாக்குதலை மேற்கொண்டிருப்பதாக சீன அரசாங்கம் குற்றம் சுமத்தி இருக்கிறது.
Average Rating