நேபாளத்தில் விமான விபத்து : 9 பேர் பலி!

Read Time:1 Minute, 1 Second

Nebal.Flag1.jpgநேபாளத்தில் மிக உயரமான மலைப் பகுதிக்கு உணவுப் பொருட்களை எடுத்துச் சென்று விமானம் ஒன்று தரையிறங்கும் போது விபத்திற்குள்ளானதில் அதில் இருந்த 9 பேரும் உயிரிழந்தனர்! யெட்டி ஏர்வேஸ் நிறுவனத்தின் இரட்டை இயந்திர ஓட்டர் விமானம், நேபாள்கன்ச் என்ற இடத்திலிருந்து புறப்பட்டு 9,000 அடி உயரமுள்ள ஜும்லா எனும் மலைப் பகுதிக்கு உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டு பறந்தது. ஜும்லாவில் தரையிறங்கும் போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டு கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் அதிலிருந்த 3 விமான பணியாளர்கள் உட்பட 9 பேரும் உயிரிழந்ததாக நேபாள செய்தி கூறுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வாழ்வா சாவா போராட்டம்: 2-வது சுற்றுக்கு தகுதி பெறுமா இத்தாலி- செக் குடியரசுடன் நாளை மோதல
Next post சீன கம்ïனிஸ்டு கட்சியில் 7 கோடி உறுப்பினர்கள்