பாலமுனையில் சிசுவின் சடலம் மீட்பு

Read Time:2 Minute, 7 Second

child-002மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனைக் கடற்கரையில் கரையொதுங்கிய பெண் சிசுவின் சடலமொன்றை திங்கட்கிழமை (17) மாலை மீட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கரையொதுங்கிய இச்சடலத்தை கண்ட மீனவர்கள் இது தொடர்பில் பாலமுனை கிராம அலுவலருக்கும் பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து, குறித்த இடத்திற்குச் சென்று காத்தான்குடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு சடலத்தை மீட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

இச்சிசு பிறந்து 02 அல்லது 03 நாட்களே இருக்கலாமெனவும் பொலிஸார் கூறினர்.

மேலும், குறித்த இடத்திற்குச் சென்று சடலத்தை பார்வையிட்ட ஏறாவூர் மற்றும் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தின் நீதவானும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவானுமான ஏ.எம்.றியாழ், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறும் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

அத்துடன், இச்சடலம் கரையொதுங்கியதைக் கண்டவர்களை எதிர்வரும் 25ஆம் திகதி நீதிமன்றத்திற்கு சமூகமளிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில், சடலம் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இது தொடர்பில் விரிவான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொலை மற்றும் ஆட்கடத்தல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!
Next post நீதிமன்ற தீர்ப்பை விமர்சிப்பது தவறு -யாழ்.மாநகர முதல்வர்