செல்லப் பிராணிகளுக்காக மாதாந்தம் 430,000 ரூபா செலவு செய்யும் பெண்
பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டில் ஐந்து நாய்களை தனது சொந்த குழந்தைகளை போல வளர்த்து வருகிறார். அந்த செல்லப்பிராணிகளுக்கு அவர் மாதாந்தம் 2,000 பவுண்களை (சுமார்430,000 ரூபா) செலவிட்டு வருகிறார்.
37 வயதான டேனியலா போர்சேவ் எனும் பெண்ணும் அவரவது கணவரான 42 வயதான மிக் போர்சேவ்வும் தங்களுக்கு குழந்தைகள் இல்லாத காரணத்தினால் ஐந்து நாய்களை தனது குழந்தைபோல் வளர்த்துவருகிறார்களாம்.
இந்த செல்லப்பிராணிகளுக்கான ஒரு அறையை ஒதுக்கி வைத்துள்ளார்கள். இந்த நாய்களுக்கான வரவேற்பு அறை ஒன்று உள்ளது இதற்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்காக படுக்கையறை மெத்தை ஒன்றும் விசேடமாக அமைந்துள்ளனர்.
இந்த நாய்களுக்கு உரோமங்களை அழகுபடுத்தி பலவர்ணங்களில் நிறமாற்றம் செய்துவருகின்றனர். அத்தோடு நாய்களின் நகங்களுக்கு நகப்பூச்சும் பூசப்படுகிறது. இந்த அலங்காரங்களுக்காக வீட்டிலேயு ஒரு அழகு சாதன நிலையமொன்றையும் அமைத்துள்ளனர்.
இந்த நாய்களுக்கான விசேடமான முறையில் உணவு சமையக்காரர்களால் சமைத்து உணவு வழக்கப்படுகின்றது. நாய்களுக்கான உடைகள் ஒரு அலுமாரி முழவதும் நிறைந்திருப்பதாக டேனியலா தெரிவித்துள்ளார்.
Average Rating