ஆஸ்திரேலியாவில் ஓடும் ரெயிலில், செக்ஸ் வைத்து கொண்ட தம்பதியருக்கு ரூ. 34 ஆயிரம் அபராதம்
ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரில் ஓடும் ரெயிலில் எல்லோரும் பார்க்கும் வகையில் தம்பதிகள் செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபடுவது போன்ற வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
செக்ஸ் வீடியோக்களை வெளியிடும் இணையதளத்தினர் அது தொடர்பான காட்சிகளை படமாக்க ஏற்ற இடத்தை தேர்வு செய்த நிலையில் இறுதியாக ஓடும் ரெயிலில் அதனை எடுக்க முடிவு செய்தனர்.
அதன்படி, அந்நாட்டின் மெல்போர்ன் நகரில் எப்பிங் பகுதிக்கு செல்லும் வழியில் ஓடும் ரெயிலில் பெட்டி ஒன்றில் தம்பதிக்ள் அமர்ந்துள்ளனர். அவர்கள் இருவரின் முகமும் வெளிச்சத்தில் நன்றாக தெரிகிறது.
அந்த பெட்டியில் அவர்களுடன் மேலும் பலர் பயணம் செய்துள்ளனர். ரிசர்வாய்ர் பகுதியில் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினராக வருவோர் அதிகம் நடமாடும் பகுதியான எட்வர்ட்ஸ் லேக் பார்க் பகுதியில் ஓடும் ரெயிலில் தம்பதிகள் செக்சில் ஈடுபடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து விக்டோரியா காவல்துறை செய்தி தொடர்பாளரான மூத்த கான்ஸ்டபிள் மெலிசா சீச் கூறும்போது, அந்த தம்பதிகள் இருவரும் தலா 563 அமெரிக்க டாலர் (ரூ 34 ஆயிரம்) அபராதம் கட்டியுள்ளனர். மற்றவர்கள் புண்படும் மற்றும் குற்றம் விளைவிக்கும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இது போன்று மற்றொரு செய்தி தொடர்பாளரான கிறிஸ் ஹாமில்டன் கூறுகையில், அவர்களது நடவடிக்கைக்காக அவர்கள் வெட்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால், மெட்ரோ ரெயில்கள் பெண் செய்தி தொடர்பாளரான டெய்ட் கூறும்போது, இந்த வீடியோ 4 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது போன்று இருக்கிறது. மெல்போர்ன் ரெயில் பாதையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்குவதற்கு முன்பாக வீடியோ உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Average Rating