மாடுகளால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..
Read Time:1 Minute, 13 Second
மாடுகளின் வெப்பம் காரணமாக தீ விபத்து எச்சரிக்கை சமிக்ஞைகள் ஒலித்ததால் போயிங் 474 ரக விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது.
ஐரிஸ் கடல் பகுதிக்கு மேலாக இவ்விமானம் பறந்துகொண்டிருந்தபோது திடீரென தீ எச்சரிக் சமிக்ஞை ஒலிகள் ஒலித்தன. இவ்விமானத்தில் மிருகங்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியிலிருந்து இந்த எச்சரிக்கை ஒலி எழுந்தது.
இதனால் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இவ்விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஆனால் அதன்பின் விமானத்தை சோதனையிட்டபோது தீ அல்லது புகை ஏற்பட்டமைக்கான எந்த தடயங்களும் காணப்படவில்லை.
விமானத்தில் 390 மாடுகள் இருந்ததால் ஏற்பட்ட அதிக வெப்பம் காரணமாக மேற்படி எச்சரிக்கை ஒலி எழுந்ததாக தொழில்நுட்பவியலாளர்கள் கண்டறிந்தனர்.
Average Rating