மகளது கள்ளக் காதலுக்கு உதவிய, மாமியாரை கொன்ற மருமகன்..
Read Time:1 Minute, 2 Second
மட்டக்களப்பு, இருதயபுரம் பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் வெட்டுக் காயங்களுக்கு இலக்கான பெண் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்து வரும் வழியில் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு, இருதயபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் மகளது கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகளது கள்ளக் காதலுக்கு உதவியமையின் காரணமாக மருமகன் குறித்த பெண்ணை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating