அரபு நாட்டை சேர்ந்த 3 சகோதரிகளை, சுத்தியால் அடித்து தாக்கிய ஆசாமி
ஐக்கிய அரபு எமிரேட்டை சேர்ந்த 3 சகோதரிகளை, சுத்தியால் அடித்து பயங்கரமாக தாக்கிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
ஐக்கிய அரபு நாட்டை சேர்ந்தவர்கள் இங்கிலாந்துக்கு சுற்றுலா வந்து செல்கின்றனர். இதனால் ஐக்கிய அரசு நாட்டில் இருந்து இங்கிலாந்தின் பல நகரங்களுக்கு நேரடி விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், எமிரேட், கத்தார், ஓமன் ஆகிய நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு எலக்ட்ரானிக் விசா சலுகை திட்டத்தை இங்கிலாந்து அறிமுகப்படுத்தியது.
இதன் மூலம் சுற்றுலா பயணிகள் எளிதில் விசா பெற முடியும்.இந்நிலையில், இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள கம்பர்லேண்ட் ஓட்டலில் தங்கியிருந்த ஐக்கிய அரபு நாட்டை சேர்ந்த 3 சகோதரிகளை மர்ம ஆசாமி சுத்தியால் பயங்கரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓட்டல் அறையில் தங்கியிருந்த 3 பேரும் 30 வயதுக்குள் இருக்கும். அவர்கள் அறை கதவை பூட்டாமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை தூங்கி உள்ளனர். அதிகாலை அறைக்குள் புகுந்த மர்ம ஆசாமி 3 பேரையும் சுத்தியால் தாக்கிவிட்டு தப்பி உள்ளான்.
இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார்.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர். மேலும், ரத்த கறையுடன் யாராவது ஓட்டலில் இருந்து தப்பி செல்வதை நேரில் பார்த்திருந்தால் தகவல் தந்து உதவும்படி பொதுமக்களை போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Average Rating