பிரான்சில் மாணவி கற்பழிப்பு: 500 மாணவர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை
Read Time:1 Minute, 18 Second
பிரான்ஸ் நாட்டில் அட்லாண்டிக் கடல் பகுதியில் லாரோசெல்லீ நகரம் உள்ளது. இங்குள்ள ஒரு தனியார் உயர்நிலைப் பள்ளியில் 1200 மாணவர்கள் படிக்கின்றனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அங்குள்ள கழிவறைக்கு 16 வயது மாணவி சென்றாள். அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவளை யாரோ கற்பழித்து விட்டனர்.
மின்சாரம் இன்றி இருட்டாக இருந்ததால் தன்னை சீரழித்தவன் யார் என அந்த மாணவியால் தெரிவிக்க முடியவில்லை. விசாரணையிலும், அந்த கயவன் யார் என அறிய முடியவில்லை.
எனவே, பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் ‘டி.என்.ஏ’ பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 475 மாணவர்கள், 31 ஆசிரியர்கள் மற்றும் 21 பள்ளி அலுவலக ஊழியர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டது.
பலகட்ட பரிசோதனைக்கு பிறகு அந்த மாணவியை கற்பழித்தது யார்? என தெரியவரும்.
Average Rating