தம்பதியை கொலை செய்த, கொள்ளையனுக்கு விஷ ஊசி மூலம் மரண தண்டனை

Read Time:1 Minute, 28 Second

72608146-237b-40fd-bb99-ad380860c86a_S_secvpfஅமெரிக்காவில் மிஸ்கோரி பகுதியை சேர்ந்தவர் வில்லியம் ரவுசன் (57). கொள்ளைக்காரனான இவன் கடந்த 1993–ம் ஆண்டு ஒரு வீட்டில் திருடினான். அப்போது அங்கிருந்த கணவன்–மனைவியை கொலை செய்தான்.

எனவே அவனை கைது செய்தது போலீசார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு அவனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

அமெரிக்காவில் விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இதை எதிர்த்து வில்லியம் ரவுசன் கோர்ட்டில் அப்பீல் செய்தார். அதில் விஷ ஊசியின் ரசாயனம் மிகவும் வீரியமானது. அதன் மூலம் உயிரிழக்கும் போது அதிக வேதனையும், உடல் கஷ்டமும் ஏற்படும். எனவே, விஷ ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தான்.

மனுவை விசாரித்த கோர்ட்டு அவனது கோரிக்கையை நிராகரித்தது. அதை தொடர்ந்து நேற்று அவனுக்கு ரகசியமாக விஷ மருந்து செலுத்தி தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரோபோவுடன் கால்பந்து விளையாடிய ஒபாமா
Next post ‘பேஸ்புக்’ தோழியுடன் கணவன் ஓட்டம்; கண்டுபிடித்து தரக்கோரி மனைவி போலீசில் புகார்!