சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய, 63 வயது நபருக்கு கல்லால் எறிந்து மரண தண்டனை
Read Time:58 Second
நைஜீரியாவிலுள்ள மத நீதிமன்றமொன்று 10 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய எயிட்ஸ் வைரஸ் தொற்றுக்குள்ளாக்கிய 63வயது நபருக்கு கல்லால் எறிந்து மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது.
கனோ நகரை சேர்ந்த உபலி செய்து டொட்ஸா என்பவருக்கே இவ்வாறு கல்லால் எறிந்து மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உபலி விபரிக்கையில்
தான் பிசாசு ஒன்றால் தூண்டப்பட்டே மேற்படி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே உபாலியின் இரு மனைவியர் எயிட்ஸ் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி மரணமானமை குறிப்பிடத்தக்கது.
Average Rating